Tuesday, January 24, 2012

Birth Day Greetings

25 Jan 2012

எங்கள் வாழ்க்கையை தென்றலாக மாற்ற பிறந்தவளே

எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற பிறந்தவளே

எங்கள் வாழ்க்கை கரும்பாய் தித்திக்க பிறந்தவளே

எல்லோர்க்கும் இனியவளாய் இருக்க பிறந்தவளே

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தன்னலம் கருதாது உதவி செய்வதை கடமையாக நினைத்து, உதவி மகிழ்ந்த ஒப்பற்ற உள்ளம் கொண்டவளாக பிறந்தவளே

எங்களுக்காகவே பிறந்தவளே

எங்கள் அருமை கிரிஜாவே/அம்மாவே/ பாட்டியே

உனக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


கிருஷ்ணன்,
சுதா, சந்தர்,
சுபா,மகேஷ்,
தனுஷ்,சுகோஷ்,மஹதி,தர்ஷிணி

Saturday, January 21, 2012

மகா பெரியவா- 5

21 Jan 2012

While admiring Maha Periavaa for what He did to the mankind, we should also know the ordeal he went thro in his early days as Sankaracharya.

Here, Brahmashree Musiri Dikshitar recounts the early days of our beloved Maha Periyava.


Thenambakkam, Biksha time: the young soft voice asks : 'vaazhaipazham illaya ?' a curt 'no'. 'has not come yet?'. an indifferent 'no' 'poovan pazham kooda illaya?' asks our Maha Periyava who is saakshath Parameswaran, who sees to that every single soul gets its food everyday.'not that too' comes the reply in an emotionless voice.

Aduthurai, Bhiksha time : 'has not the juice of lemon added to kosmalli?'. 'no' 'has it not come ?' 'no'. 'you can get it in the Aduthurai shandy'. 'a lot of crowd. no one has the time to go and buy it'.

Mutt : 'ugranathukku poi krambu vaaindu va' (for HIS toothache). the man in charge of the kitchen :'no, don't have it'. ' i am not asking for myself. it is for Accharya'. ' look, its not as if i have it and don't want to give it. as i said i don't really have it' says the dry voice.the devotee comes back and says it politely to Maha Periyava. In a quiet voice HE says 'go and ask in some of the houses around. some one will give'.

Brahmashree goes on to add 'if Mahalakshmi thaayar had known how much her son would struggle to get even a banana, a lemon.......what a heart break it would have been for her. what a sacrifice she did, for the benefit of millions of people like us and what she got in return (She would have always seen HIM as her son)

Well, this is what HE really went through when HE was in the teens when the mutt was not doing well financially. HE went through all that, did tapas, adhered to vrathas, sacrificed even the smallest of comforts and lived 100 years (and even after) to bless us all. BLESSED ARE WE. ( I am blessed too, to come back after a long gap and put up a post on HIM)

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

மகா பெரியவா - 4

21 ஜனவரி 2012

ஆஹா' என்று இருங்கள்

* பொழுது போக்கையே வாழ்க்கைப் போக்காக, அதிலும் வழுக்கிவிடுகிற போக்காக ஆக்கிக் கொள்ளாமல், எந்த அளவோடு ருசித்துவிட்டு நிறுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டோ, மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டோ
இல்லாமல், "ஆஹா' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான்.

* அனைவரும் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு மனசினால் நிறைந்து, சுபிட்சமாக இருக்க வேண்டும். வசதி உள்ளவர்களும் எளிய வாழ்க்கை நடத்துவது அவர்களுக்கும் நல்லது, மற்ற ஜன சமூகத்துக்கும் நல்லது.

* வியாதிக்கு மருந்து மாதிரி, பசிக்கு உணவு ரொம்ப அளவாகத்தான் போட வேண்டும். பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் உணவே, தவிர ருசியைத் தீர்க்க அல்ல.

காஞ்சி மகா பெரியவா

மகா பெரியவா -3

21 ஜனவரி 2012

காஞ்சி மகன் பல விஷயங்களில் எடுத்த நடவடிக்கைகள் யாவும் நம்மை இப்போதும் பிரமிக்க வைக்கின்றன

ஒரு சமயம் ஆந்திராவில் இருந்து வந்த பல வித்வான்கள் பெரியவா முன்னாள் அமர்ந்திருந்தார்கள் அந்த வித்வான்கள் எல்லாரும் மெத்த படித்தவர்கள் தங்கள் சொல்லவேண்டியதை கணீரென்ற குரலில் சற்று உரக்கவே சொல்லுவார்கள்
ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதுவும் தங்கள் கருத்துதான் ஏற்றுக்கொள்ளகூடியது என்று அடித்து சொல்லுவார்கள் . ஏறக்குறைய பதினைந்து பேர் ஞானநூல்களை பற்றிய விவாதம் - ஏறக்குறைய "பட்டி மன்றம்" போல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இரு பகுதிகளாக பிரிந்து விவாதம் நடத்தினார்கள் பெரியவா அதை மிகவும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தார் ஒவ்வொருவரும் தங்கள் கட்சியை எடுத்து சொல்லும்போது அது தான் சரி என்று நினைக்க தோன்றும்

எல்லாரும் பேசி ஒய்ந்தார்கள் இவ்வளவு நேரம் பொறுமையாக தாங்கள் பேசியதையெல்லாம் இந்த மகான் கேட்டுக்கொண்டிருந்தாரே இவர் என்ன சொல்லப்போகிறாரோ? என்று அவரது திருமுகத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள் .
லேசாக புன்னகைத்தவாறு மகான் ஒரு சில வார்த்தைகளில் தனக்கே உரித்தான அந்த அமைதியான குரலில் சொல்லி முடித்தார்

அந்த சமயத்தில் மடத்தில் வேதம் பயின்று கொண்டிருந்த மாணவன் ஒருவன் மகானுக்கு பின்னால் நின்றுகொண்டு அவருக்கு விசிறிக்கொண்டிருந்தான் பெரியவா அந்த வார்த்தைகளை சொல்லக்கேட்ட அந்த மாணவன் "ஆஹா" என்று வாய்விட்டு சொல்லிவிட்டான் .

பெரியவா மெதுவாக அவனை திரும்பி பார்க்கின்றார் பிறகு பதில் ஏதும் பேசாமல் திரும்பிக்கொண்டார் , அதே சமயத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பண்டிதார்கள் யாவரும் எழுந்தனர் அதில் ஒருவர் மட்டும் "நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதற்கு மகா பெரியவா ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டீர்கள் அதனால் நாங்கள் பேசியதெல்லாம் தவறோ என்கிற ஐயம் எங்களுக்குள் எழுகின்றது இப்போது நாங்கள் புறப்பட்டு போய் நன்றாக விவாதித்த பிறகு நாளை பெரியவாளை வந்து சந்திக்கின்றோம் என்றார் .
வித்வான், மகானிடம் காட்டிய அடக்கம் பக்தி பூர்வமானது பெரியவா அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிவிட்டு அன்றைய நடை முறை பூஜைகளை எல்லாம் கவனிக்க ஆரம்பித்தார் எல்லாம் முடிய இரவு வெகு நேரமாகிவிட்டது பெரியவா படுத்துவிட்டார் ,ஆனால் தூங்க வில்லை

காலையில் எனக்கொரு பய்யன் விசிறிக்கொண்டு இருந்தானே அவனை கூப்பிடு என்று மடத்து சிப்பந்திக்குக் கட்டளையிட்டார்

அவன் அழைக்கப்பட்டான் இந்த நேரத்தில் மகான் தன்னை எதற்க்காக அழைக்கிறார் ? என்று அவன் வந்தான் வந்தவனிடம் பெரியவா கேட்டார்
"காத்தால சதஸ்ல என்ன சொன்னே"?
"நான் ஒன்னும் சொல்லலியே"
அவன் அழ ஆரம்பித்தான் பிறகு சுதாரித்துக்கொண்டான்
"நான் காலையில சதஸ்ல உட்கார்ந்தது இருந்தபோது வித்வான்கள் எல்லாம் பேசினா, பேச்சு முடிஞ்சதுக்கு அப்புறம் அவர்களுக்கு பதிலாக நான் நாலு வார்த்தை சொன்னேன் , அதை கேட்டுட்டு "நீ ஆஹான்னு சொன்னே இல்லையா"
"ஆமா"
"பெரிய வித்வத் சபைல ஜெயிக்ரவங்களும் கிடையாது , தோக்ரவங்களும் கிடையாது , விஷயங்களை எல்லாரும் கற்றுக் கொள்கிறார்கள்
இரு பக்கமும் பேசியதை வச்சுண்டு நான் நாலே வார்த்தைதான் சொன்னேன் "அப்போ நீ ஆஹான்னு சொன்னதால அவங்க பேசினது எல்லாம் தப்புங்கற மாதிரியும் , நான் பேசினது தான் சரிங்கற மாதிரியும் ஆகிறது இல்லையா? பெரிய வித்வத் சபைல இப்படியெல்லாம் பேசப்டாது தெரியுமா"

மாணவன் புரிந்துகொண்டான் மகானை வணங்கி விடை பெற்றான்

மகா பெரியவா -2

21 ஜனவரி 2012

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது ஓரிக்கையில் இருக்கும்போது சுந்தரராமன்(மடத்தில் பெரியவாளுக்கு சேவை செய்யும் சிறுவன் ), பூணூல் இல்லாமல் இருந்ததை மகான் கவனித்து விட்டார்.

நீ ஏன் இன்னும் உபநயனம் செய்து கொள்ளவில்லை?" என்று மகான் கேட்டார்.

"அதற்குத் தேவையான பணம் அப்பாவிடம் இல்லை போலிருக்கிறது" என்று சுந்தரராமன் சொல்ல, சில நிமிடங்கள் மகான் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார்

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபனயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார்

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபனயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்


ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்:

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார் " மகா பெரியவா எங்களண்டை" நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார்

" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும் என்று மகாபெரியவா சொன்னா செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். " மகா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு முன்பே கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்து வந்தோம்" அவர் மேலும் சொன்னார்:" நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று. சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல முடியாமல் பேசமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கா " தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை அவர்கள் முன் வைத்தார்கள் .

உபனயனத்திர்க்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு வந்தன , அதனால் மகான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும் நடந்தது .

மகா பெரியவா முன்பு மடத்திலேயே உபநயனம் செய்துகொண்ட சுந்தரராமன் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் வாழ்த்தினர் .

பூஜையை முடித்துக்கொண்ட மகானை, குடும்பமே கால்களில் விழுந்து நமஸ்கரிக்க, மகான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுக்க பிறகு சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா? என்று கேட்க, அந்த மாதரசியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மகானை வணங்கின. அன்று மடத்தில் எல்லோருக்கும் சிறப்பு சாப்பாடு

Friday, January 20, 2012

மகா பெரியவா- 1

20 Jan 2012


காஞ்சி மகா பெரியவர் ( சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் )பற்றி படிக்கும் போதெல்லாம் என் உடம்பு புல்லரிக்கிறது. அவரைப்பற்றி நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!


.....மற்றொரு நிகழ்ச்சி தொடரும்